நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் நாகை சங்கம் சார்பில் இறையன்புக்கு சிறப்பு செய்யப்பட்டது

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கம் சார்பாக சிறந்த ஆளுமையும் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான முனைவர் வெ இறையன்பு மற்றும் முனைவர் வெ திருப்புகழ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் வரலாறு பற்றிய சிங்கப்பூர் எழுத்தாளர் எழுதிய புத்தகம் அவர்களுக்கு அன்பளிப்பாக சங்க தலைவர் ஜெகபர் சாதிக் வழங்கினார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தபோது அவரது சீரிய பணிகள் குறித்து ஜியாவுத்தீன் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து எழுத்துப் பணியிலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாக இறையன்பு தெரிவித்தார்.

- ரொஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset