நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிறப்புரிமை குடியுரிமை வழிமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் விவேக் ராமசாமி

வாஷிங்டன் : 

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். பல ஊர்களுக்குச் சென்று தனக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சிமி வேலி பகுதியில் அமைய பெற்ற ரொனால்ட் ரீகன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த விவாதத்தில் விவேக் ராமசாமி அகதிகள் குடியுரிமை குறித்துப் பேசியுள்ளார்.

சட்ட விரோதமாக இந்நாட்டில் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் "பர்த்ரைட் சிடிசன்ஷிப்" (birthright citizenship) எனப்படும் பிறப்புரிமை குடியுரிமை முறையைத் தாம் ரத்து செய்வதாகத் தமது விவாதத்தில் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது திருத்தம் குறித்து எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். ஆனால், தாம் அந்த திருத்தத்தைப் படித்திருப்பதாகவும நாட்டில் சட்ட விரோதமாகக் குடியேறி, அதன் பின்பு இங்கு பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை தடை செய்வது அரசியலமைப்பு சட்டப்படி சரியானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

இதுவரை 14-ஆவது சட்டத் திருத்தம் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை எனக் கூறும் மற்றொரு குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டிம் ஸ்காட், விவேக்கின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக இந்திய மென்பொருள் மற்றும் உயர்த் தொழில்நுட்பப் பணிகளில் உள்ளவர்கள் பலரும் அடைய துடிக்கும் ஹெச்-1பி விசா எனப்படும் அந்நாட்டில் குடியேறி பணி செய்ய அனுமதிக்கும் வழிமுறையை விவேக் ராமசாமி ரத்து செய்து விடுவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset