நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வடக்கு ஈராக்கில் திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில்  100 பேர் பலி: 150 பேர் காயம்

நினிவே: 

ஈராக்கின் நினிவே மாநிலத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில் திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்.  150 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் தடபுடலாக திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த திருமண நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நூறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset