நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லிபியா அணை உடைப்பு: 8 அதிகாரிகள் கைது

கெய்ரோ:

லிபியாவில் புயலின்போது இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்த நாட்டு சட்டத் துறை உயரதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக டெர்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது தொடர்பாக, நீர்வளத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்து விசாரித்து வருகிறோம்.

அவர்களில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள் ஆவர்; ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். தவறான மேலாண்மை, அலட்சியம், தவறான முடிவுகள் போன்றவற்றால் இந்தப் பேரிடருக்குக் காரணமாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset