செய்திகள் உலகம்
இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு தகர்க்கப்பட்டது: 4,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
சிங்கப்பூர் :
இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தகர்க்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் 4,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள், வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்கு முன்னர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட ஆகப் பெரிய போர்க்கால வெடிகுண்டுகளில் ஒன்றாக நம்பப்படும் 100 கிலோகிராம் எடையுடைய அந்த வெடிகுண்டு, சிங்கப்பூர் ஆயுதப் படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் செவ்வாய்க்கிழமை படிப்படியாகத் தகர்க்கப்படும்.
அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் இரண்டாவது நடவடிக்கை பின்னர் தொடரும் என அறியப்படுகிறது.
குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப இப்போதைக்குப் பாதுகாப்பானதாக இல்லை.
அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது ஏற்பட்ட சத்தம், பிற்பகல் 12.30 மணிக்கு புளோக் 153 கங்சா சாலையிலிருந்து கேட்க முடிந்தது.
கட்டுமானத் தளம், சாலைகள், அருகிலுள்ள கால்வாய்கள், குழாய்கள், காலியான கூட்டுரிமை வீடுகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைக் கட்டட, கட்டமைப்புப் பாதுகாப்புக்காக கட்டட, கட்டுமான ஆணையம், பொது பயனீட்டுக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm