நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தின் இடதுபுற இயந்திரம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் விமானம் அவசர தரையிறக்கம் 

சிங்கப்பூர்: 

ஏர் சீனா விமானத்தின் இடதுபுற இயந்திரத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அவ்விமானம் சிங்கப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

இதனால் விமானத்தில் பயணம் செய்த 155 பேரில் 9 பேருக்குச் சொற்ப காயங்கள் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள செங்டூவிலிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு செல்லும் வழியில் கார்கோ பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது என்று சாங்கி விமான நிலையம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

மாலை 4.15 மணிக்கு சம்பந்தப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த அனைத்து பயணிகளும் விமான ஊழியர்களும் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். 

அத்துடன் இடதுபுற இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset