நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய மருந்துகளுக்கு அனுமதி அளித்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:

இந்தியாவில் இருந்து  மருந்துகளின் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே சில அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைப் போக்க இந்தியாவில் இருந்து முக்கிய மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்து கொள்ள தடையில்லா சான்றிதழைப் பெற சாமானிய மக்களும் மருத்துவனைகளும் விண்ணிப்பிக்கலாம்.

2022ஆம் ஆண்டைய இறக்குமதிக் கொள்கை ஆணையின்படி இந்தியாவில் இருந்து எந்த மருந்தையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படவில்லை என பாகிஸ்தான் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset