நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் கானுன் புயல் காரணமாக 500க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து 

தோக்கியோ:  

ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவானது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடந்தது. அப்போது 198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன் தினம் 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்டநிலையில் நேற்று 500-க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset