நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் இரத்து

சென்னை :

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை இரயில்கள் உள்பட 3 இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை இந்த விபத்தில் 233 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஒடிசா இரயில் விபத்துக் காரணமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதலமைச்சர் செல்லும் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset