செய்திகள் தமிழ் தொடர்புகள்
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் இரத்து
சென்னை :
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை இரயில்கள் உள்பட 3 இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை இந்த விபத்தில் 233 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடிசா இரயில் விபத்துக் காரணமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதலமைச்சர் செல்லும் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 16, 2024, 8:40 am
தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது
April 15, 2024, 9:41 pm
காங்கிரஸும் திமுகவும் காமராஜரை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது: மோடி குற்றச்சாட்டு
April 15, 2024, 2:28 pm
மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி: ப. சிதம்பரம்
April 14, 2024, 2:07 pm
போதைப்பொருள் கடத்தல் மூலம் ரூ. 40 கோடி ஈட்டிய ஜாபர் சாதிக்: அமலாக்கத்துறை தகவல்
April 14, 2024, 11:16 am
பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணமா? தேர்தல் பறக்கும் படை சோதனை: பணம் கடத்தப்படுவதாக தகவல்
April 13, 2024, 1:01 pm
காரை நிறுத்தி ஸ்டாலினுக்கு இனிப்பு வாங்கிச் சென்ற ராகுல் காந்தி
April 13, 2024, 12:35 pm