நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் 25 பேர் பலி

காஸா:

இஸ்ரேல் காஸா மீது நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்லாமியப் போராளிகள்  3 முக்கிய தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காஸா சிட்டியிலும், தெற்குப் பகுதி நகரான ரஃபாவிலும் இஸ்ரேல் தாக்குதல்  நடத்தியது.

இதில் அந்த மூவர், மேலும் 13 பேர் பலியாகினர். சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு அனைத்து பாலஸ்தீன போராளி அமைப்புகளும் ஒருங்கிணைந்து பதிலடி கொடுக்கும் என்று இஸ்லாமிய ஜிஹாத் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தெற்கு இஸ்ரேல் பகுதியில் பாலஸ்தீன விடுதலை அமைப்பினர் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தளபதியைக் குறிவைத்து அவரது இல்லத்தில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை விமானத் தாக்குதல் நடத்தியது. இதில், அலி கலி என்ற அந்த முக்கிய தளபதி பலியானதாக ராணுவம் கூறியுள்ளது.

அவரையும் சேர்த்து, கடந்த 3 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset