நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் பறந்த விமானம் இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கியது 

திருச்சி:

தமிழகத்தின் திருச்சி நகரிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட IndiGo விமானம் இந்தோனேசியாவின் மேடான்  நகருக்கு மாற்றிவிடப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது

விமானம் நேற்று (9 மே) உள்ளூர் நேரம் மாலை 6.50 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம் இந்தோனேசிய ஆகாயவெளியில் விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

எதிர்பாரதவிதமாக அது சிறிது நேரத்தில் 15,000 அடி உயரத்துக்கு இறங்கியதாக flightradar24 எனும் விமானக் கண்காணிப்புத் தளம் காட்டியுள்ளது.

இறுதியில் அது  மேடான் நகரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது,

விமானத்தில் காற்று அழுத்தப் பிரச்சினைகளால் விமானம் அவசரமாகத் தரையிறங்கியிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset