நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்

உமன்:

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைகளை சரமாரி வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிர தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட "குரூஸ்' வகை ஏவுகணைகள், இலக்கின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தக் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

2 மாதங்களுக்குப் பிறகு தலைநகர் கீவிலும் ஏவுகணைகள் வீசப்பட்டன. மத்திய உக்ரைனில் அமைந்துள்ள உமன் நகரின் 9 அடுக்கு குடியிருப்பொன்றில் ஒரு ரஷிய ஏவுகணை விழுந்து வெடித்தது.

இதில் 10 வயது சிறுவன், ஒரு குழந்தை உள்பட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

இது தவிர, ராக்கெட் விழுந்து வெடித்ததில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 சிறுவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்புக் குழுவினர் மீட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset