செய்திகள் உலகம்
ஓடும் இரயிலில் தீ; எழுவர் கருகி மரணம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சிந்து மாநிலமான கராச்சியிலிருந்து லாகூரை நோக்கி சென்று கொண்டிருந்த கராச்சி எக்ஸ்பிரஸ் இரயில் நேற்று முன்தினம் இரவு அந்த இரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
இதனால் அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். எனவே அந்த ரெயில் தண்டோ மஸ்தி கான் என்ற இரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துத் தீயணைப்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரயிலின் அந்தப் பெட்டி மீது தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களின் கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே இரயிலுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் பலர் இரயிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் மீட்பு பணியில் சற்றுச் சிரமம் ஏற்பட்டது.
இரயிலில் இருந்த 3 குழந்தைகள் உள்பட எழுவர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am