நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை குறித்த ஆய்வு நூல் வெளியீட்டு விழா; மே 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

கோலாலம்பூர்:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை குறித்த ஆய்வு நூல் வெளியீடு காணவுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 13ஆம் தேதி மே மாதம் தலைநகரிலுள்ள டான்ஶ்ரீ கே.ஆர். சோமா AUDITORIUM அரங்கில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வினை சிவாஜி கணேசன் கலை மன்றம் மலேசியா ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், இந்த புத்தகமானது தமிழ்ப்பள்ளிக்கூடங்கள்  மற்றும் பல்கலைக்கழக நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கபடவுள்ளது என்று ஏற்பாட்டுக்குழு தரப்பு தெரிவித்தது. 

மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளர்களாக நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் திரு. ராம்குமார், நூலாசிரியர் முனைவர் மருது மோகன். நம்நாட்டு பிரமுகர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள், மற்றும் ரசிகர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.

திரையுலகையும் மேடை நாடக உலகையும் ஒருங்கே கட்டியாண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, மூன்று பாகங்களாக 1650 பக்கத்தில் பல்வேறு ஆய்வுச் சான்றுகளுடன் செதுக்கியிருக்கிறார் இந்த நூலை எழுதிய முனைவர் மருதுமோகன் அவர்கள்.

இந்த நூலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கையின் இளமை பருவம்,நாடக திரை உலக அனுபவங்கள், அரசியல் நிலைப்பாடு மற்றும் சமுதாயத்தில் அவர் அடைந்த சிறப்பு நிலை ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த ஆய்வு சுயசரிதை கலைஞர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் சிவாஜியைப் பற்றிய கலைக்களஞ்சியமாக மட்டுமன்றி, ஒட்டு மொத்த திரையுலகிற்கும் வழிகாட்டியாகவும் திகழும்.

அவரது நடிப்பும் முகபாவங்களும் உடல் மொழியும் திரையிலும் நாடக அரங்கிலும் புதிய அணுகுமுறையை உருவாக்கி, கட்டுப்பாடுகளைகளைந்தெறிந்த மகா கலைஞனின் வாழ்நாள் குறிப்பு.

கலையுலகின் கருவூலமாய் வாழ்ந்த கலைஞனைப் பற்றிய பொக்கிஷமான இந்நூல் பல்கலைக்கழக நூலகங்களிலும் பள்ளிக்கூட நூலகங்களிலும் கலை, திரைப்பட வரலாறு தொடர்பான மாணவர்கள் மேற்கோள் கொள்ள வைக்கப்பட வேண்டும்.

3 பாகங்களாக 1650 பக்கங்களை கொண்ட இந்த நூலின் குறைந்த விலை ரிங்கிட் மலேசியா 200 ஆகும். அனைவரும் வருகை தந்து எங்கள் முயற்சிக்கு ஆதரவு தருமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset