நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அர்க்துருஸ் உருமாறிய தொற்று காரணமாக பிரிட்டனில் ஐவர் மரணம்

லண்டன்: 

கோவிட் 19 உருமாறிய தொற்றான அர்க்துருஸ் தொற்று தற்போது உலகளாவிய நிலையில் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. 

பிரிட்டனில் இந்த அர்க்துருஸ் தொற்றினால் இதுவரை ஐந்து மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார அமைச்சரகம் தெரிவித்தது. 

135 அர்க்துருஸ் சம்பவங்கள் கண்டறியப்பட்ட நிலையில் இந்த மரணங்கள் பதிவு செய்யப்பட்டது பிரிட்டன் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அர்க்துருஸ் வகையிலான திரிபுடைய கோவிட் 19 தொற்று ஒமிக்ரோன் தொற்றின் வகையான BA.210.1 மற்றும் BA.2.75 ஆகும். இந்த அர்க்துருஸ் தொற்று ஜனவரி மாத இறுதியில் அடையாளம் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset