நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர்கிறது

சென்னை:

சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. 

இதன் காரணமாக காருக்கு 5 முதல் 15 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயரும் என கூறப்படுகிறது. 

இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்துடன், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset