செய்திகள் தமிழ் தொடர்புகள்
சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர்கிறது
சென்னை:
சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
இதன் காரணமாக காருக்கு 5 முதல் 15 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயரும் என கூறப்படுகிறது.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்துடன், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm
தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
April 19, 2024, 12:32 pm