நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஒரே நேர்க்கோட்டில் 5 கிரகங்களை நாளை மாலை பார்க்கலாம்

நியூயார்க் : 

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் நாளை தோன்றவுள்ளது.

மார்ச் 28 செவ்வாய்க்கிழமை இந்த கிரக வரிசையைக் காண முடியும். அவ்வாறு காண விரும்புவோர் சூரியன் மறைவுக்குப் பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்கிறார் நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக். 

இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும்.

ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், ஒரே நேரத்தில் 5 கிரகங்களும் ஒரே வரிசையில் இருப்பதை காண இயலாமல் போகும்.

சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

வானம் தௌிவாக இருக்கும் நிலையில், மேற்குப்புறத்தை நன்றாக காணமுடியும் சூழலில் உலகின் எந்தத் திசையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காணலாம். 

வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை நேராகக் கண்ணால் காண்பது ஓரளவு எளிது என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.

அதிலும் வெள்ளி மிகவும் பிரகாசமாக இருக்கும். செவ்வாய் கிரகம், நிலவுக்கு அருகில் சிவப்பாய் ஒளிரும்.

ஆனால் புதனும், யுரேனசும் கொஞ்சம் மங்கலான நிறத்தில் இருப்பதால் அவற்றைக் கண்டுப்பிடிப்பதற்கு கொஞ்சம் கடினமாகும். பைனாகுலர்ஸ் இருந்தால் வசதியாக இருக்கும்.

அதிலும், காணவே முடியாத யுரேனஸ் கிரகத்தை காண்பதற்கான அரிய வாய்ப்பாக இது இருக்கும். இது போல பல்வேறு கிரகங்கள், பல்வேறு எண்ணிக்கையில் வானில் வரிசையாக தோன்றுவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகும்.

கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின. மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த ஜூனில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம்: மலேசியா கெஸட்

தமிழில்: அஸ்வினி

தொடர்புடைய செய்திகள்

+ - reset