
செய்திகள் இந்தியா
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
கொச்சி:
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021 பேரவைத் தேர்தலில், இடுக்கி மாவட்டத்தில் தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிட்ட ராஜா போலி ஜாதிச் சான்றிதழ் அளித்ததாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.குமார் தாக்கல் செய்த வழக்கில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ராஜா, தான் ஹிந்து பட்டியலினத்தவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதற்கான ஜாதிச் சான்றிதழை தேவிகுளம் தாசில்தார் அளித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போதே குமாரின் குற்றச்சாட்டை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்துவிட்டார். ஹிந்து மதத்தின்படியே நான் திருமணம் செய்து கொண்டேன் என்று நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பி.சோமராஜன் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம்:
தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே ராஜா கிறிஸ்தவத்துக்கு மாறிவிட்டார். திருமணத்தின்போது ராஜா தம்பதி கிறிஸ்தவ திருமண உடையில் இருந்துள்ளனர்.
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிவிட்டு, தன்னை ஹிந்து என கூறிக் கொள்ள முடியாது. தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிடுவதற்கான தாழ்த்தப்பட்டோர் பிரிவை ராஜா சாராதததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm