
செய்திகள் இந்தியா
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
கொச்சி:
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021 பேரவைத் தேர்தலில், இடுக்கி மாவட்டத்தில் தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிட்ட ராஜா போலி ஜாதிச் சான்றிதழ் அளித்ததாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.குமார் தாக்கல் செய்த வழக்கில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ராஜா, தான் ஹிந்து பட்டியலினத்தவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இதற்கான ஜாதிச் சான்றிதழை தேவிகுளம் தாசில்தார் அளித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போதே குமாரின் குற்றச்சாட்டை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்துவிட்டார். ஹிந்து மதத்தின்படியே நான் திருமணம் செய்து கொண்டேன் என்று நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பி.சோமராஜன் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம்:
தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே ராஜா கிறிஸ்தவத்துக்கு மாறிவிட்டார். திருமணத்தின்போது ராஜா தம்பதி கிறிஸ்தவ திருமண உடையில் இருந்துள்ளனர்.
கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிவிட்டு, தன்னை ஹிந்து என கூறிக் கொள்ள முடியாது. தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிடுவதற்கான தாழ்த்தப்பட்டோர் பிரிவை ராஜா சாராதததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am