நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோசியா

டோஹா:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் குரோசியா அணியினர் வெற்றி பெற்றனர்.

கத்தாரில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோசியா அணியினர் ஜப்பான் அணியை சந்தித்து விளையாடினர்.

தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதனால், முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும்1-1 என சம நிலை வகித்தன. 

கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 

இதையடுத்து பெனால்டி முறை கொண்டு வரப்பட்டது. இறுதியில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset