நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

விதாலிடி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஏஎப்சி போ போர்னமௌத் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணிக்காக டெக்லன் ரைஸ் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கேப்ரியல் மெக்காலஸ் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் பிரிக்டோன், வோல்வேர்ஹாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset