செய்திகள் உலகம்
ஓவியர் இஸ்மாயில் அடித்து கொலை: 49 பேருக்கு அல்ஜீரியா நீதிமன்றம் மரண தண்டனை
அல்ஜீர்ஸ்:
அல்ஜீரியா நாட்டின் அமைந்துள்ள பெர்பர் மலைப்பகுதியில் காட்டுத்தீயை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஓவியர் ஜமீல் பென் இஸ்மாயிலை அடித்துக் கொன்ற 49 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெர்பர் மலைப்பகுதி சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ மூண்டது. இதில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 90 பேர் பலியாகினர்.
இக் காட்டுத்தீயில் சிக்கியவர்களுக்கு உதவும் நோக்கில் 320 கி.மீ பயணித்து கடுமையான பாதிப்புக்குள்ளான லார்பாநாத் இராதேன் பகுதிக்கு வந்தடைந்தார் ஓவியர் பென் இஸ்மாயில்.
அவர் அப் பகுதியைச் சாரதாவர் என்பதால் இஸ்மாயில்தான் தீ வைத்திருக்க கூடும் என்று எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கிராமத்தினர் கடுமையாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்தனர்.
டிரா எல் பெய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்தப் படுகொலை வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 38 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அல்ஜீரியா நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற தடை இருப்பதால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆயுள் தண்டனை கைதியாக சிறையிலிருப்பார்கள்.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm