
செய்திகள் இந்தியா
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வாங்கினார் சசி தரூர்
புது டெல்லி:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு படிவத்தை சசி தரூர் வாங்கினார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்த நிலையில் சசி தரூரும் களமிறங்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
இத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரியின் அலுவலகத்தில் சசி தரூர் சார்பில் அவரது நெருங்கிய உதவியாளர் ஆலிம் ஜவேரி சனிக்கிழமை வேட்புமனு படிவத்தைப் பெற்றார்.
வேட்புமனு தாக்கல் செய்ய மாநில கமிட்டி உறுப்பினர்கள் 10 பேரின் ஆதரவு தேவை என்பதால், அவர்களது கையொப்பங்களைப் பெற்று, செப். 30இல் சசி தரூர் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு அன்றுதான் கடைசி நாளாகும்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கெலாட், சசி தரூர் இடையே போட்டி உருவாகியுள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய போட்டியை கட்சி சந்திக்கவிருக்கிறது.
கட்சித் தலைவர் சோனியா காந்தியை சசி தரூர் கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தலைவர் தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை சசி தரூர் தெரிவித்ததாகவும், இத் தேர்தலில் தான் நடுநிலை வகிக்க இருப்பதாக அவரிடம் சோனியா கூறியதாகவும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1இல் நடைபெறவுள்ளது. மனுவை திரும்பப் பெற அக்டோபர் 8 கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலையில் வெளியிடப்படும்.
அக்டோபர் 17இல் தேர்தல் நடத்தப்பட்டு, 19}ல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதில் மாநில கமிட்டி உறுப்பினர்கள் 9,000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm
ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்கம் பறிமுதல்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது
October 16, 2025, 11:44 am