செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முப்பெரும் விழா: தமிழக முதல்வர் நாளை 26 ஜூன் 2022 தொடக்கி வைக்கிறார்
திருச்சி:
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முப்பெரும் விழா நாளை 26 ஜூன் 2022 ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது.
இந்த விழாவில் காணொலி வழியாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பங்கேற்று கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டம் மற்றும் GLOBAL JAMALIANS BLOCK ஆகிய முப்பெரும் விழாவை தொடங்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.
இந்த விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சமுதாயத் தலைவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொஹைதீன் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரகப் பிரிவு தலைவர் பூதமங்கலம் ஜியாவுதீன் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்க உள்ளனர்.
அமீரகப் பிரிவு பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm
தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
April 19, 2024, 12:32 pm