நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின் மீதான 4 குற்றச்சாட்டுகளைக் கைவிட்ட முடிவு குறித்து சட்டத்துறை தலைவர் விளக்கமளிக்க வேண்டும்: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

புகாரி ஈக்விட்டி தொடர்பான, முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மீதான நான்கு குற்றச்சாட்டுகளைத் தொடர வேண்டாம் என்ற முடிவு குறித்து  தலைமை சட்டத்துறை தலைவர் டத்தோ துசுகி மொக்தார் விளக்கமளிக்க வேண்டும்.

ஜசெக தலைவர் கோபிந்த் சிங் தியோ இதனை வலியுறுத்தினார்.

மொஹைதின் நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்த, குற்றமற்றவர் என விடுவிக்கப்படாமல் விடுவிப்பதற்கான மனு குறித்து துசுகி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணை அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதால், வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது என்று இலக்கவியல்  அமைச்சருமான அவர் கூறினார்.

பொதுமக்களுக்குத் தெளிவான நியாயமும் முழுமையான விளக்கமும் அளிக்கப்படாமல், முக்கியத்துவம் வாய்ந்த தீவிர வழக்குகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டால், சட்டத்துறை தலைவர் மீதான நம்பிக்கையும், ஒட்டுமொத்த குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையும் கடுமையாகச் சீர்குலைக்கப்படும்.

யார் மீதாவது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, ​​வழக்குத் தரப்பு அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து, நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு உறுதியான அடிப்படையைக் கொண்டிருக்கும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset