செய்திகள் உலகம்
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
கஹெரா:
காசா பகுதியை எகிப்துடன் இணைக்கும் முக்கிய வழியான ரஃபா எல்லைச் சாவடி, வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி ஊடகங்களிடம் பேச அதிகாரம் அளிக்கப்படாததால், பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி சின்ஹுவாவிடம், எல்லைச் சாவடி "இரு திசைகளிலும்" மீண்டும் திறக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
எகிப்தின் அல்-கஹிரா நியூஸ் தொலைக்காட்சி, எகிப்தியப் பக்கத்திலிருந்து காசாவுக்குத் திரும்பச் செல்லத் தயாராகும் சில பாலஸ்தீனியர்களின் காட்சிகளை ஒளிபரப்பியது.
எகிப்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் எட்டு பாலஸ்தீனியர்களும், அவர்களுடன் 17 குடும்ப உறுப்பினர்களும், காசாவுக்குத் திரும்புவதற்காக முன்னதாகவே எல்லைக் கடக்கும் இடத்திற்கு வந்தடைந்ததாக அந்த வட்டாரம் மேலும் கூறியது.
காசாவிலிருந்து வரும் பாலஸ்தீனியர்களை அழைத்துச் செல்வதற்காக எகிப்திய தரப்பிலும் ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன என்றும் அது மேலும் கூறியது.
ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, ரஃபா எல்லைச் சாவடி பிப்ரவரி 28 அன்று மூடப்பட்டது. தனிநபர்களைக் கொண்டு செல்வதற்காக புதன்கிழமை அன்று சாவடி தற்காலிகமாகத் திறக்கப்படும் என்று இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது, இருப்பினும், மீண்டும் திறப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
ஈரானில் உளவுத்துறை அமைச்சரை கொலை செய்த இஸ்ரேல்: "யாரையும் விடமாட்டோம்" என நெதன்யாகு அறிவிப்பு
March 19, 2026, 11:09 am
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?: ராணுவத்தின் செல்வாக்கை எதிர்த்தவருக்கு நேர்ந்த கொடூரம்
March 19, 2026, 10:43 am
ஏவுகணை தாக்குதலின் விளைவு: பென் குரியொன் விமான நிலையத்தில் சேதம்
March 19, 2026, 10:12 am
