செய்திகள் தமிழ் தொடர்புகள்
கடும் பனிமூட்டத்தினால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு: திருப்பி அனுப்பப்பட்ட 7 விமானங்கள்
சென்னை:
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நீண்ட நேரம் கடும் பனிமூட்டம் நிலவியதால், சென்னை விமானநிலையத்தில் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதில் 7 விமானங்கள் ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், 10க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு தாமதமானதால் ஏராளமான பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சென்னையில் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் நீண்ட நேரம் கடும் பனிமூட்டம் நிலவியது. இதையடுத்து, சென்னை விமானநிலையப் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது.
இதனால் சென்னை விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், அங்கு ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால் தரையிறங்க முடியாமல், வானில் நீண்ட நேரம் வட்டமடித்து தத்தளித்துவிட்டு, மீண்டும் பெங்களூருக்கும் திருப்பதிம் திருப்பி அனுப்பப்பட்டன.
குறிப்பாக, மும்பையில் இருந்து 157 பயணிகளுடன் இன்ற காலை 6.35 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மும்பையில் இருந்து 149 பயணிகளுடன் காலை 7 மணியளவில் சென்னை வந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், கோலாலம்பூரில் இருந்து 180 பயணிகளுடன் காலை 7 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூரில் 164 பயணிகளுடன் காலை 7.15 மணியளவில் சென்னை வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் காலை 8 மணியளவில் சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தம் 12 விமானங்கள், சென்னை விமானநிலைய ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்தன.
இதைத் தொடர்ந்து, அந்த 12 விமானங்களையும் சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பெங்களூர், திருப்பதி விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதுதவிர, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 21 விமானங்களின் புறப்பாடும் கடும் பனிமூட்டம் காரணமாக பலமணி நேரம் தாமதமாகி உள்ளன.
குறிப்பாக, சென்னையில் இருந்து பெங்களூர், ஐதராபாத், மும்பை, அந்தமான், திருச்சி, டெல்லி, கோலாலம்பூர் உள்பட 10 விமானங்களின் புறப்பாடு, கடும் பனிமூட்டம் காரணமாக பலமணி நேரம் தாமதமாகியுள்ளன. இதன் எண்ணிக்கை கடும் பனிமூட்டம் காரணமாக இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை விமானநிலையப் பகுதிகளில் தொடர் பனிமூட்டம் காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு சூரிய ஒளி வந்ததும் விமான சேவைகள் சகஜ நிலைக்கு திரும்பியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 10:37 pm
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்த விஜய்: காலையிலிருந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
April 8, 2026, 10:40 pm
புதுச்சேரியில் நாளை 9ஆம் தேதி காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
April 8, 2026, 12:50 pm
தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.53.57 லட்சம் பறிமுதல்
April 7, 2026, 8:03 pm
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்
April 7, 2026, 3:53 pm
