நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் நீக்கம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை: 

அன்​புமணி ஆதரவு எம்​எல்​ஏக்​கள் 3 பேரை பாமக​வில் இருந்து நீக்​கி​யுள்​ள​தாக கட்​சி​யின் நிறு​வனர் டாக்டர் ராம​தாஸ் அறி​வித்​துள்​ளார்.

பாமக​வில் தந்தை ராம​தாஸ், மகன் அன்​புமணி இடையே மோதல் போக்கு தொடர்​கிறது. இதனால் கட்​சி​யினர் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். 

பாமக​வில் உள்ள 5 எம்​எல்​ஏக்​களில் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் ராம​தாஸுக்கு ஆதர​வாக​வும், வெங்​கடேஸ்​வரன், எஸ்​.ச​தாசிவம், சி.சிவக்​கு​மார் ஆகியோர் அன்​புமணிக்கு ஆதர​வாக​வும் செயல்​பட்டு வரு​கின்​றனர். 

கட்​சி​யில் இருந்து அன்​புமணி​யின் ஆதர​வாளர்​களை ராம​தாஸ் நீக்​கு​வதும், ராம​தாஸ் ஆதர​வாளர்​களை அன்​புமணி நீக்​கு​வதும் தொடர்ந்து நடை​பெறுகிறது. 

அந்த வகை​யில் சமீபத்​தில் ஜி.கே.மணி. இரா.அருளை கட்​சி​யில் இருந்து அன்​புமணி நீக்​கி​னார்.

இந்​நிலை​யில், அன்​புமணி ஆதரவு எம்​எல்​ஏக்​கள் 3 பேரை நீக்கி ராம​தாஸ் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக நேற்று ராம​தாஸ் பாமக​ பொதுச்​செய​லா​ளர் வெளி​யிட்ட அறிக்கை:

கட்சி விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்ட எம்எல்ஏக்களிடம் பாமக​வின் ஒழுங்கு நடவடிக்கை குழு​ விளக்​கம் கேட்டு கடந்த ஜூலை 20-ஆம் தேதி அனுப்​பட்ட கடிதத்​துக்கு இது​வரை அவர்கள் எந்​த பதி​லும் அளிக்​க​வில்​லை.

தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்​கை​யில் ஈடு​பட்டு வரு​வ​தால், எம்​எல்​ஏக்​கள் சி.சிவக்​கு​மார், எஸ்​.ச​தாசிவம், எஸ்​.பி.வெங்​கடேஸ்​வரன் ஆகிய மூவரும் கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்து பதவி​களில் இருந்​தும் ஜன.12 முதல் முழு​மை​யாக நீக்​கப்​படு​கிறார்​கள். 

பாமக​வினர் யாரும் மேற்​கண்ட மூவரிடம் எந்​த​வித கட்சி தொடர்​பும் வைத்து கொள்ள வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​படுகிறார்​கள்​. இவ்வாறு அந்த அறிவிப்பில் ​ தெரிவிக்கப்பட்டுள்ளது​.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset