நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அரையிறுதியில் அர்செனல்

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

இதைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் கடுமையாக போராடிய அர்செனல் அணியினர் 8-7 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset