செய்திகள் விளையாட்டு
கொல்கத்தவில் வன்முறை: மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
கொல்கத்தா:
சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸியின் இந்திய பயண ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கொல்கத்தா போலிசார் கைது செய்தனர்.
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்தியா வந்தார்.
கொல்கத்தாவில் சால்ட் லேக் அரங்கிற்கு காலை 11.15 மணியளவில் மெஸ்ஸி சென்றார்.
அரங்கிற்கு வந்த மெஸ்ஸி, ரசிகர்களின் அடாத செயலால் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.
இதனால் சால்ட் லேக் அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டது.
டிக்கெட்டுகளை திரும்பப் பெறுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரங்கில் இருந்த அனைத்து
பொருட்களையும் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு வசதிகள் செய்யாததற்கு மெஸ்ஸி ரசிகர்களிடம் முதல்வர் மம்தா மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்நிலையில், மெஸ்ஸியின் இந்திய பயண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கொல்கத்தா போலிசார் கைது செய்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:04 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சவூதியில் உள் நெருக்கடி உருவாகிறது
February 3, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 2, 2026, 10:06 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 2, 2026, 10:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
