செய்திகள் தமிழ் தொடர்புகள்
சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு விருந்து
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக காலை முதலே சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர்.
சீமானுக்கு வாழ்த்துக் கூற வருகை தந்த தொண்டர்களுக்காக அவரது வீட்டில் தடபுடலான கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சுமார் 3 ஆயிரம் பேருக்கு விருந்து தயாரானது. இதையடுத்து நீலாங்கரைக்கு வந்த தொண்டர்கள் வரிசையாக சீமானை சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அவர்களுக்காக மீன் வறுவல், நல்லி எலும்பு குழம்பு, மட்டன் சுக்கா, சிக்கன் பக்கோடா என 13 வகையான அசைவ உணவுகளும், சாம்பார், ரசம், வடை, பாயாசம், பொறியலுடன் 9 வகையான சைவ உணவுகளும் பரிமாறப்பட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 11:00 am
சென்னை விமான நிலையத்தில் 71 விமான சேவை ரத்து: 7-ஆவது நாளாக தவித்த பயணிகள்
December 7, 2025, 11:18 pm
நாளை முதல் 6 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
