செய்திகள் தமிழ் தொடர்புகள்
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை கல்லறைத் திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருவதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 1,200க்கும் ஐஸ் மல்லி 600 ரூபாயில் இருந்து 800க்கும் ஜாதிமல்லி மற்றும் முல்லை 300ல் இருந்து 400க்கும் கனகாம்பரம் 300ல் இருந்து 2,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல், அரளி பூ 100 ரூபாயில் இருந்து 300க்கும் சாமந்தி 100ல் இருந்து 200க்கும் சம்பங்கி 80ல் இருந்து 200க்கும் பன்னீர் ரோஸ் 60ல் இருந்து 160 க்கும் சாக்லேட் ரோஸ் 80ல் இருந்து 200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’இன்று கல்லறை திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களை வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் அனைத்து பூக்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறுவதால் விவசாயிகள், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 7:19 am
புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா: கட்சிக் கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
