நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

டிச.7 இல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல்

சென்னை:

டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்று அக் கட்சியின் முக்கிய சட்ட விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கப்பட்டிருந்த மறுநாளே தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதிமுகவின் சட்ட விதிகளில் திருத்தம்
இதுகுறித்து அதிமுக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கழக அமைப்பின் பொதுத்‌ தேர்தல்‌ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்‌ என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர்‌, கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌ தேர்தல்‌ டிசம்பர் 7 ஆம் தேதி  காலை 10:00 மாலை 5:00 மணி வரை நடக்கும். நடைபெறுகிறது. வேட்புமனுவை 3,4 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

அதிமுகவின் கிளை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகளுக்கு டிசம்பர் 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை உட்கட்சி தேர்தல்நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கும் பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக சென்னை நேற்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சிறப்பு தீர்மானத்தை அதிமுக செயற்குழு கொண்டு வந்தது.

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset