நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 

தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.1) ஓரிரு இடங்களிலும், ஆக. 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
 
தமிழகத்​தில் நாளை (ஆக. 2) டெல்டா மாவட்​டங்​களான தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகபட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை, கடலூர், விழுப்​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

வரும் 3-ஆம் தேதி டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் புதுக்​கோட்​டை, கடலூர், விழுப்​புரம், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், 4-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், அரியலூர், பெரம்​பலூர், கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், 5-ஆம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், அரியலூர், பெரம்​பலூர், திருச்​சி, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம் மாவட்​டங்​களி​லும், 6-ஆம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், அரியலூர், கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னையிலும் புறநகர் பகு​தி​களிலும் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. 

இன்று முதல் வரும் 4-ஆம் தேதி வரை
தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா, குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 60 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​ பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset