நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது

லண்டன்:

அணியை வலுப்படுத்தும் நோக்கில் 18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியுள்ளது.

பராகுவேயின் இளம் ஆட்டக்காரர் டியாகோ லியோனை செரோவை இந்த கட்டணத்திற்கு ஒப்பந்தம் செய்ததை அக் கிளப் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் வோல்வ்ஸிலிருந்து மேத்தியஸ் குன்ஹாவின் 360 மில்லியன் ரிங்கிட்டுக்கு அக் கிளப் வாங்கியது.

இதனைத் தொடர்ந்து கோடைகால பரிமாற்றத்தில் அவர் இரண்டாவது வீரராக ஒப்பந்தமாகிறார்.

லியோன் அடுத்த வாரம் சீசனுக்கு முந்தைய பயிற்சிக்காக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவர் முதல் அணியிலேயே நீடிப்பாரா அல்லது விளையாடும் நேரத்தைப் பெறுவதற்கு கடனுக்கு வழங்கப்படுவரா என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு நிர்வாகி ரூபன் அமோரிம், பயிற்சி ஊழியர்களால் கண்காணிக்கப்படுவார் என்று தெரிகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset