
செய்திகள் தமிழ் தொடர்புகள்
போலிஸ் விசாரணையில் பலியான அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்
திருப்புவனம்:
போலிஸ் விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அவர்களுக்கு தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,
தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் குடும்பத்தாரிடம் விஜய் தெரிவித்தார்.
முன்னதாக வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
போலிஸ் விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் பலியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அஜித்குமார் இல்லத்திற்குச் சென்று இன்று ஆறுதல் கூறினார்.
போலிசாரின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm