
செய்திகள் மலேசியா
இரண்டே ஆண்டுகளில் மலேசிய மறுசுழற்சி சங்கம்; உலகளாவிய நிலையில் புதிய அடையாளம்: டத்தோ ஜோ சரவணன்
கோலாலம்பூர்:
2023ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலேசிய மறுசுழற்சி சங்கம் இரண்டே ஆண்டுகளில் நாட்டின் மறுசுழற்சி துறையை வலுப்படுத்தும் முக்கிய சக்தியாக வளர்ந்து, உலகத் தளத்திற்கே இடம் பெயர்ந்துள்ளது.
இத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவமுள்ள தலைவர் டத்தோ ஜோ சரவணன் தலைமையில், இந்த அமைப்பு துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய தரநிலைகளை நிறுவி வருகிறது.
உலகத் தொடர்பை விரிவுபடுத்த, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மறுசுழற்சி பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட மலேசிய மறுசுழற்சி சங்கம் மலேசியாவின் ஒருங்கிணைந்த ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் பன்முகத்தன்மையுள்ள குழுவினால் முன்னின்று நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய மறுழற்சி சங்கம் உலக அளவில் முன்னோடியான கொள்கைகளை ஆதரித்து தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது.
மக்களிடையே பசுமை மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று ஊடகத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.
நாம் மலேசியாவை உலக மறுசுழற்சி துறையில் மதிப்பிற்குரிய, போட்டியிடக்கூடிய நாடாக உருவாக்க வேண்டும்.
மறுசுழற்சி என்பது வெறும் கழிவுகளை நிர்வகிப்பது அல்ல; எதிர்காலம் நோக்கிய பசுமை பொருளாதாரத்தை உருவாக்கும் செயல் என்று அவர் வலியுறுத்தினார்.
இச்சங்கத்தின் பன்முக குழு, மலேசியாவின் பல்வகை தன்மையின் சிறந்த எடுத்துக்காட்டு.
இதன் மூலம் உள்நாட்டு, உலகளாவிய நடவடிக்கைகள் விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் நடைபெறுகிறது.
உலகளாவிய விரிவாக்க முயற்சியாக சங்கம் பல முக்கிய உலக மறுசுழற்சி அமைப்புகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவின் Material Recycling Association of India (MRAI), அமெரிக்காவின் Recycled Materials Association (ReMA) (முன்பு ISRI), மத்திய கிழக்கு பகுதியின் Bureau of Middle East Recycling (BMR), ஐரோப்பாவின் Bureau of International Recycling (BIR) இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தங்கள் மலேசிய மறுசுழற்சி சங்கம் உறவு பலப்படுத்துவதோடு, புதிய சந்தைகளையும் திறக்க உதவுகின்றன.
மேலும் இது மலேசிய மறுசுழற்சி துறையின் ஐரோப்பிய சந்தை பங்கேற்பை பெருக்கும்.
முதலீடு, வர்த்தகம், தொழில் துறை அமைச்சு, மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம், மலேசிய ஸ்டீல் நிறுவனம் மூலம் மறுசுழற்சி துறைக்கு தேவையான கொள்கை ஆதரவை உறுதி செய்கிறது.
இது பொருளாதார மாற்றத்தின் ஒரு ஊக்கியாகும் என்று டத்தோ ஜோ சரவணன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm