நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய கிண்ண கால்பந்து போட்டி: ஜேடிதி அணியினர் சாம்பியன்

புக்கிட்ஜாலில்:

மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று ஜேடிதி அணியினர் சாதித்துள்ளனர்.

புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜேடிதி அணியினர் ஸ்ரீ பகாங் அணியை சந்தித்து விளையாடினர்.

முற்பாதி ஆட்டத்தில் சரவணன் ஒரு கோலை அடித்து ஸ்ரீ பகாங் அணியை முன்னிலைப்படுத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற பிற்பாதி ஆட்டத்தில் பெர்க்சோன் டா சில்வா, அரிஃப் அய்மான் ஆகியோர் ஜேடிதி அணிக்கு இரு கோல்களை அடித்தனர்.

தொடர்ந்து போராடிய ஸ்ரீ பகாங் அணியினர் கோல் எதுவும் அடிக்காததால் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேடிதி அணியினர் மலேசிய கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

மேலும் ஜேடிதி அணியினர் சும்பாங்சே கிண்ணம், எப்ஏ கிண்ணம், சூப்பர் லீக் கிண்ணம், மலேசிய கிண்ணம் என நான்கு கிண்ணங்களையும் வென்று ஜேடிதி அணியினர் சாதித்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset