
செய்திகள் மலேசியா
வாக்குமுலம் வழங்க 8-ஆவது முறையாக எம்ஏசிசி தலைமையகத்தில் இஸ்மாயில் சப்ரி முன்னிலையானார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் வாக்குமுலம் வழங்க 8-ஆவது முறையாக எம்ஏசிசி தலைமையகத்தில் இன்று மீண்டும் முன்னிலையானார்.
இன்று காலை 11 மணியளவில் அவர் எம்ஏசிசி தலைமையகத்தை வந்தடைந்தார்.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி எம்ஏசிசியிடம் அவர் சமர்பித்த சொத்துடைமை விவகாரம் தொடர்பாக இன்று வாக்குமூலம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது எம்ஏசிசி-யின் சட்டம் 2009 இன் பிரிவு 36(1) இன் கீழ் உட்படுத்தப்பட்டது.
அவரின் முன்னாள் மூத்த அதிகாரிகள் நான்கு பேர் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.
முன்னதாக, மார்ச் 3-ஆம் தேதி இஸ்மாயில் சப்ரிபின் பாதுகாப்பு இல்லத்தில் சுமார் 170 மில்லியன் ரொக்கமும் 16 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm