நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேம்பாட்டு பணிக்காக கோலாலம்பூர் கோபுரம் தற்காலிகமாக மூடப்படுகிறது: அரசாங்கம் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் கோபுரம் இன்று ஏப்ரல் 17ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. 

பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக
கோலாலம்பூர் கோபுரம் தற்காலிகமாக மூடப்படும் அதேவேளையில் புதிய நிர்வாகத்தின் மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல், தொடர்பு அமைச்சு தெரிவித்தது 

கோலாலம்பூர் கோபுரம் மீண்டும் திறக்கப்படும் தேதி விரைவில் அனைத்து ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று அமைச்சு தெளிவுப்படுத்தியது 

கோலாலம்பூர் கோபுரம் யாருக்கும் சொந்தமானதல்ல. அது அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகும். 

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கோலாலம்பூர் கோபுரத்தின் நிர்வாகம், நடவடிக்கைகள், பராமரிப்புகள் யாவும் LSH SERVICE MASTER நிறுவனத்தால் எடுத்துகொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset