நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன்: இராமதாஸ் அறிவிப்பு 

சென்னை: 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பாமக கூட்ட மேடையில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பாமக நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.

தற்போது பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் இராமதாஸ் கூறுகையில், இனி பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக இராமதாஸ் கூறினார் 

கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம்.

பாமக தலைவராக நான் பொறுப்பேற்றதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதனை உங்களுடன் தற்போது பகிர முடியாது. மேலும் கௌரவ தலைவராக ஜி.கே.மணி செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

பாமகவின் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என்று இராமதாஸ் அறிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset