நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் முகப்பு

By
|
பகிர்

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஜொகூர் பாரு:

ஜொகூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகின்றது. 

இன்று காலை 10 மணி நிலவரப்படி ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, 

அங்குத் தற்போது 72 குடும்பங்களைச் சேர்ந்த  236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 270 பேராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பத்து பஹாட்டில் உள்ள கம்போங் பஹாரு மற்றும் கம்போங் பாரிட் பெடோங்கைச் சேர்ந்தவர்கள்.

அங்கு இந்த வார தொடக்கத்தில் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்து மக்கள் அங்கிருந்து வெளியேற்றினர்.

- அஸ்வினி செந்தாமரை

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset