நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை திரையரங்கில் காலா​வ​தி​யான குளிர்​பானங்​கள், பாப்​கார்ன்கள்: உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை 

சென்னை: 

சென்​னை எழும்​பூரில் செயல்​பட்டு வரும் பிரபல திரையரங்​கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை அடுத்து, சென்னை மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை நியமன அதி​காரி சதீஷ்கு​மார் தலைமையி​லான குழு​வினர், அத்​திரையரங்​கில் நேற்று சோதனை​யிட்​டனர்.

அப்​போது திரையரங்​கில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் வைக்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. 

இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி சதீஷ்கு​மார் கூறிய​தாவது: 

இந்த காலா​வ​தி​யான குளிர்​பானங்​கள், பாப்​கார்ன்​கள் கேரளா​வில் இருந்து விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன.

அந்​நிறு​வனத்​துக்​கும் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்த குளிர்​பானங்​களின் காலா​வதி தேதி கடந்த நவம்​பர் மாதத்​துடன் முடிவடைந்த நிலை​யிலும், தொடர்ந்து விற்​பனை செய்து வந்​துள்ளனர்.

இதையொட்டி கேன்​டீன் உரிமை​யாளர் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். அதே​போல் சென்னை முழு​வதும் உள்ள திரையரங்​கு​களில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் குறித்து சோதனை​கள் மேற்கொள்​வதற்​காக சென்னை மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை சார்​பில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. 

இக்​ குழு விரை​வில் அனைத்து திரையரங்​கு​களுக்​கும் நேரடி​யாகச் சென்று சோதனை மேற்​கொள்​ளவுள்​ளது என்று கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset