
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை மையம்
சென்னை:
தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், கோடை காலத்தை போன்று தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலைவழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.20) முதல் 25-ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று ஓரிரு இடங்களில்அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனைத் தொடர்ந்து 21, 22, 23 தேதிகளில்ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm