நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஈரோடு கிழக்கு சட்டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்தல்: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்

ஈரோடு: 

ஈரோடு கிழக்கு சட்டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்தல் வாக்​குப்​ப​திவு இன்று (பிப். 5) நடக்​கிறது.

திமுக, நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் உட்பட 46 வேட்​பாளர்கள் தேர்தல் களத்​தில் உள்ள நிலை​யில், 2.27 லட்சம் வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர். 

இங்கு எம்எல்​ஏவாக இருந்த ஈவிகேஎஸ்​.இளங்​கோவன் மறைவையடுத்து, இடைத்​தேர்தல் அறிவிக்​கப்​பட்​டது. 

அதிமுக, பாஜக, தேமு​திக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்​தலைப் புறக்​கணித்த நிலை​யில், இண்டியா கூட்டணி சார்​பில் திமுக வேட்​பாளர் வி.சி.சந்​திரகு​மார், நாம் தமிழர் கட்சி சார்​பில் சீ​தாலட்​சுமி போட்​டி​யிடு​கின்​றனர். 

பதிவு செய்​யப்​பட்ட அரசியல் கட்சி வேட்​பாளர்​கள், சுயேச்சை வேட்​பாளர்கள் என மொத்தம் 46 பேர் களத்​தில் உள்ளனர்.
 
இன்று காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கு​கிறது. 

மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்​களிக்க வசதியாக 53 இடங்​களில் 237 வாக்​குச்​சாவடி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்ளன. 

இவற்றுள் பதற்​ற​மானவை​யாகக் கண்டறியப்​பட்​டுள்ள 9 வாக்​குச்​சாவடி மையங்​களில் கூடுதல் பாது​காப்பு ஏற்பாடுகள் செய்​யப்​பட்டுள்ளன.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset