செய்திகள் இந்தியா
மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சித் தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு தேவையான ஊட்டச் சத்து, திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளது.
மன்மோகன் சிங் கடந்து ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm
வாக்களித்தால் குடிநீர்: கர்நாடக துணை முதல்வர் மீது வழக்கு
April 20, 2024, 8:44 pm
இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am