நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்கதேசத்திற்கு இப்போது தேவை சீர்திருத்தம்; தேர்தல் அல்ல: முஹம்மது யூனுஸ்

டாக்கா: 

வங்கதேசத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் அது தவறாகிவிடும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள முஹம்மது யூனுஸ், “நாங்கள் யாரும் நீண்ட காலம் அதிகாரத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சீர்திருத்தங்கள் முக்கியமானவை. தேர்தலை நடத்துங்கள் என்று சொன்னால் நாங்கள் தேர்தலை நடத்த தயார். ஆனால் முதலில் தேர்தலை நடத்துவது தவறு.

வங்கதேசத்தில் பொது நிர்வாகம் என்பது முற்றிலும் சீர்குலைந்துள்ளது. எதேச்சதிகாரம் திரும்புவதைத் தடுக்க விரிவான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. சீர்திருத்தங்கள் என்பது கடந்த காலத்தில் நடந்ததை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு தடுப்பதற்கான அமைப்பை கட்டமைப்பதுதான்.

ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏராளமான அரசியல்வாதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியம். எனவே பத்திரிகையாளர்கள் தங்கள் விருப்பப்படி எழுத வேண்டும். நீங்கள் தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் எழுதாவிட்டால், என்ன நடக்கிறது அல்லது நடக்கவில்லை என்பதை நாங்கள் எப்படி அறிவோம்?” என தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset