நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாளத்தில் மலையேற்றத்தின் போது மாயமான ரஷ்ய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு 

காத்மாண்டு:

நேபாளத்தில் மலையேற்றத்தின்போது மாயமான ரஷ்ய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது. 

இமயமலையின் சிகரங்களில் ஏற உலகம் முழுவதில் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வம்  காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் கடந்த 6ஆம் தேதி நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர். 

முகாமில் இருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்கள் உடனான ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 

இந்நிலையில், மாயமான மலையேற்ற வீரர்கள் 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியின்போது மலையின் 7 கிலோ மீட்டர் உயரத்தில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. மலை சிகரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset