செய்திகள் உலகம்
சீனாவின் Spider Woman
குவாங்சு:
சீனாவைச் சேர்ந்த 43 வயது பெண்ணுக்குச் "சீனச் சிலந்திப் பெண்" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காரணம்?
கைகளில் உறைகளும் இல்லை... பாதுகாப்புக் கருவிகளும் இல்லை...
ஆனால் அந்தப் பெண் 100 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட பாறைகளில் சர்வசாதாரணமாக ஏறுவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லுவோ டெங்பின் (Luo Dengpin) தென்மேற்குச் சீனாவில் உள்ள குய்ஸோ (Guizhou) மாநிலத்தைச் சேர்ந்தவர்.
கைகளால் பாறைகளில் ஏறுவது பழங்கால மியாவ் (Miao) பாரம்பரியத்தின் வழக்கம் என்று South China Morning Post நாளேடு தெரிவித்தது.
உலகில் அந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஒரே பெண்மணி அவர்தான் என்று தெரிவிக்கப்பட்டது.
30 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்குச் சமமான 108 மீட்டர் உயரமுள்ள பாறையில் லுவோ திறம்பட ஏறினார்.
லுவோ 15 வயது இருக்கும்போது பாறைகளை ஏறும் வித்தையை அவரின் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார்.
ஆண்களோடு போட்டிபோட வேண்டும்.
மூலிகை மருந்துகளை எடுத்து வருமானம் சம்பாதிக்க வேண்டும்.
இந்த இரண்டு காரணங்களுக்காகப் பாறைகளில் ஏறத் தொடங்கியதாக லுவோ கூறினார்.
ஆதாரம்: South China Morning Post
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm