நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் Singtel சேவை கடும் பாதிப்பு 

சிங்கப்பூர்:

Singtel நிறுவனம், அதன் தொலைபேசிச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாய் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

அந்தத் தகவலை Singtel நிறுவனம் இன்று மாலை சுமார் 5.05 மணிக்கு வெளியிட்டது.

தடங்கலுக்கான காரணம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படுகின்றன என்றும் அது தெரிவித்தது.

"சேவைகள் கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்புகின்றன. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி," என்றது Singtel.

இன்று Singtel சேவைகளைப் பயன்படுத்தும் வங்கிகள், வர்த்தகங்களுடன் 995, 999 அவசரத் தொலைபேசிச் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset