நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

12 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்: எஸ்.ஈஸ்வரன்

சிங்கப்பூர்: 

ஊழல் விவகாரம் தொடர்பில் தமக்கு எதிரான 12 மாதங்கள் சிறை தண்டனை தொடர்பில் அதனை மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறினார் 

ஊழல் விவகாரத்தில் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையைத் தாம் ஏற்றுக்கொள்வதுடன் ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்களிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்வதாக 62 வயதான எஸ். ஈஸ்வரன் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார். 

50 வருடங்களில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் முதல் அமைச்சராக சிறை தண்டனை விதிக்கப்பட்டவராவார் 

கடந்த ஜனவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டு கொண்டு வந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த எஸ்.ஈஸ்வரன் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset